ADDED : நவ 23, 2025 06:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான வானவில் மன்ற போட்டி நடந்தது.
துவக்க விழாவிற்கு தலைமை ஆசிரியர் சிகாமணி தலைமை தாங்கினார். மேற்பார்வையாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார்.
வானவில் மன்ற ஒருங்கிணைப்பாளர் பரமசிவம் வரவேற்றார்.
வட்டார கல்வி அலுவலர்கள் மன்னர் மன்னன், இந்திரா ஆகியோர் அறிவியல் படைப்புகளுக்கான போட்டியை துவக்கி வைத்து மாணவ மாணவிகள் படைப்புகளை பார்வையிட்டனர்.
இதில் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்துக்குட்பட்ட அரசு நடுநிலை, மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

