sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வடிகால் துார்வாரப்படாததால் சாலைகளில் மழைநீர் தேக்கம்

/

வடிகால் துார்வாரப்படாததால் சாலைகளில் மழைநீர் தேக்கம்

வடிகால் துார்வாரப்படாததால் சாலைகளில் மழைநீர் தேக்கம்

வடிகால் துார்வாரப்படாததால் சாலைகளில் மழைநீர் தேக்கம்


ADDED : ஜூன் 07, 2024 06:21 AM

Google News

ADDED : ஜூன் 07, 2024 06:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் வடிகால்கள் துார்ந்து கிடப்பதால் மழைநீர் சாலையில் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.விருத்தாசலத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

பகலில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், மாலை நேர மழை மக்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. நேற்று மாலை 3:00 மணி முதல் பலத்த மின்னலுடன் கொட்டித் தீர்த்த கனமழையால், சாலைகளில் வெள்ளம் போல மழைநீர் பெருக்கெடுத்தது.வடிகால்கள் துார்வாரப்படாததால், சாலைகளில் குளமாக தண்ணீர் தேங்கியது.மேலும் பஸ் நிலையம், தெற்கு தெரு, கடைவீதி ஆகிய பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து, நிறம் மாறி காணப்பட்டது.இதனால் பாதசாரிகள் சாலையை கடந்து செல்ல முடியாமல் மிகுந்த சிரமமடைந்தனர். மழை காலம் துவங்கியதால் வடிகால்களை துார்வாரி, மழைநீர் தடையின்றி வழிந்தோட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us