/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புத்தேரி கோவிலில் ரத சப்தமி வழிபாடு
/
புத்தேரி கோவிலில் ரத சப்தமி வழிபாடு
ADDED : பிப் 18, 2024 12:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் ரத சப்தமி சிறப்பு வழிபாடு நடந்தது.
பெண்ணாடம் அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவருக்கு காலை 7:30 மணியளவில் சிறப்பு திருமஞ்சனம், வாசுதேவ புண்யாகம், ரக்ஷாபந்தனம்; 9:30 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. மாலை 6:30 மணியளவில் விஷ்ணு சகஸ்ரநாம ேஹாமம் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.