ADDED : நவ 05, 2025 07:27 AM

திட்டக்குடி: வெளிமாவட்டங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தி சென்ற 2 பேரை கைது செய்தனர்.
திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், தலைமை காவலர் சதீஷ்குமார் ஆகியோர் இரவு ரோந்து முடித்து நேற்று காலை 6:00 மணியளவில் ஆவினங்குடி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, தொ.செங்கமேடு கிராமத்தில் சந்தேகத்தின்பேரில் நின்ற, டாடா ஏஸ் வேனை சோதனை செய்த போது, 1 டன் எடையுள்ளரேஷன் அரிசி மூட்டைகள் இருந் தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக, வேன் டிரைவர் திருச்சி மாவட்டம், கொளக்குடி, கீழத்தெருவை சேர்ந்த முத்துராமன் மகன் சிங்கபெருமாள், 26, மற்றும் உடன் வந்த அரியலுார் மாவட்டம், குழுமூரைச் சேர்ந்த செல்வம், 27; என்பவரை கைது செய்தனர்.
இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு, வேன் மற்றும் வேனில் கொண்டு வரப்பட்ட 1 டன் ரேஷன் அரிசியை மாவட்ட குடிமை பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஆவினங்குடி போலீசார் ஒப்படைத்தனர்.

