
புவனகிரி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால், முதல் முறையாக பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டது.
புவனகிரி அருகே தம்பிக்குநல்லாம்பட்டினத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு புவனகிரி பேரூராட்சி, ஆயிபுரம் மற்றும் ஆதிவராகநல்லுார் ஊராட்சி பகுதிகளில் எல்லை உள்ளது.
இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க ஆயிபுரத்திற்கு, 5 கி.மீ., சுற்றி செல்லும் அவல ம் ஏற்பட்டது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதை த்தொடர்ந்து நேற்று முன்தினம் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.
விடுமுறை தினங்கள் தவிர்த்து வாரத்தில், 4 நாட்கள் இயங்கும். திறப்பு விழாவில் கள அலுவ லர் வேம்பு வரவேற்றார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் சக்திலட்சுமி, வட்ட வழங்கல் அலுவலர் விக்டோரியாராணி முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைப்பதிவாளர் நவீனா சிறப்பு விருந்தினராக பங்கேற்று முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
விற்பனையாளர் கார்த்தி நன்றி கூறினார்.

