/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 12, 2026 03:54 AM

கடலுார்: ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர், பொது வினியோக திட்டத்திற்கு தனித்துறை, ரேஷன்கடை பணியாளருக்கு ஓய்வூதியம், அனைத்துக் கடைகளுக்கும் எடையாளர் நியமனம் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் கந்தன், துணைத்தலைவர் மணிகண்ட பூபதி தலைமை தாங்கினர். நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், தட்சிணாமூர்த்தி, சிவா, முரளி, அய்யப்பன், ராமானுஜம் முன்னிலை வகித்தனர். அரசு பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் நல்லதம்பி, முன்னாள் மாவட்ட தலைவர் குணசேகரன் கோரிக்கைகளை வலியுறுத்திப்பேசினர். மாவட்ட பொருளாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

