ADDED : ஏப் 26, 2026 09:15 PM
அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே பெண்ணை தாக்கிய விவகாரத்தில் உறவினர் கைது செய்யப்பட்டார்.
பு.முட்லுார் காந்திநகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது, சகோதரர் மகாலிங்கம். இந்தஇருவருக்கும் முன் விரோதம் உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மகாலிங்கம், ரவிச்சந்திரன் வீட்டிற்கு சென்றார். அங்கு ரவிச்சந்திரனின் மனைவி சுசிலாவை, ஆபாசமாக திட்டி, தாக்கி கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.
இதுகுறித்து, சுசிலா கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, மகாலிங்கத்தை, 44; கைது செய்தனர்.
