sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிதம்பரத்தில் குழந்தை இறப்பு உறவினர்கள் சாலை மறியல்

/

சிதம்பரத்தில் குழந்தை இறப்பு உறவினர்கள் சாலை மறியல்

சிதம்பரத்தில் குழந்தை இறப்பு உறவினர்கள் சாலை மறியல்

சிதம்பரத்தில் குழந்தை இறப்பு உறவினர்கள் சாலை மறியல்


ADDED : ஜூலை 30, 2025 07:08 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனையில், பிரசவத்தின் போது, சரியாக சிகிச்சை அளிக்காததால் குழந்தை இறந்தாக கூறி உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.

சிதம்பரம் அடுத்த ஆயிப்பேட்டை, தெற்கு தெருவை சேர்ந்தவர் எழில் ராஜன் மனைவி முத்துலட்சுமி, 26; நிறைமாத கர்ப்பிணியான, இவர், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் அதிகாலை முத்துலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டு மயங்கி நிலையில் இருந்தார். நேற்று சிகிச்சை அளித்த டாக்டர்கள், தாயின் வயிற்றிலேயே பெண் குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளனர். ஆத்திரமடைந்த உறவினர்கள், டாக்டர்களிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு நிலவியது.

தொடர்ந்து, டாக்டர்களின் அலட்சியத்தால் குழந்தை இறந்ததாகவும், சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை கோரியும் மருத்துவமனை எதிரில் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த சிதம்பரம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

இதையடுத்து குழந்தையின் உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us