sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

/

விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்


ADDED : ஜூன் 01, 2025 04:17 AM

Google News

ADDED : ஜூன் 01, 2025 04:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டும் பணிக்காக, தற்காலிக கடைகள் அகற்றும் பணி நடந்தது.

விருத்தாசலம்-காட்டுக்கூடலுார் சாலையில் தினசரி காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு 90 காய்கறி கடைகள் இயங்கின. இந்நிலையில், இப்பகுதியில் 5.41 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட் கட்டும் பணி நடக்கிறது.

இதில், 94 கடைகள் கட்டப்படுகிறது. முதற்கட்டமாக ஒரு பகுதியில் 40 கடைகள் கட்டப்பட்டு 80 சதவீதம் பணி முடிவடைந்த நிலையில் உள்ளது. இங்கு, வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை நடத்தி வந்ததால் கட்டுமான பணி பாதித்தது.

இதன் காரணமாக, நகராட்சி நிர்வாகம், தற்காலிக கடைகளை அகற்ற கோரி, நோட்டீஸ் வழங்கியது. ஆனால், வியாபாரிகள் கடைகளை அகற்றாததால், நகராட்சி கமிஷனர் பானுமதி தலைமையிலான அதிகாரிகள் நேற்று ஜே.சி.பி., இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையில், நகராட்சி அதிகாரிகள் காய்கறி வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, டெண்டர் விடப்பட்டு, கடைகள் விடப்படும் உறுதியளித்தனர். இதையடுத்து வியாபாரிகள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us