ADDED : ஜன 28, 2026 07:05 AM

மந்தாரக்குப்பம்: ஜெயப்பிரியா வித்யாலயா கல்வி குழுமங்களில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
விருத்தாசலம் ஜெயப்பிரியா சீனியா் செகண்டரி பள்ளியில் நடந்த விழாவில் கல்விக் குழும தலைவர் ஜெய்சங்கர் தேசிய கொடியேற்றி மாணவர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோல, நெய்வேலி வடக்குத்து ஜெயப்பிரியா பள்ளியில் நடந்த குடியரசு தினவிழாவில் பள்ளி இயக்குநர் தினேஷ் கொடியேற்றினார். மேலும் கோபாலபுரம், திருப்பயர், தொழுதுார், திரிபுரநேணி உள்ளிட்ட பள்ளிகளில் குடியரசுதின விழா கொண்டாடப்பட்டது.விழாவில் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

