
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: காட்டுமன்னார்கோவிலில், எம்.ஆர்.கே., கல்லுாரியில், 77 வது குடியரசு தின விழா நடந்தது. சேர்மன் கதிரவன் தலைமை தாங்கினார். எம்.ஆர்.கே., நினைவு அறக்கட்டளை தலைவர் தெய்வ சிகாமணி தேசியக்கொடி ஏற்றினார்.
கல்லுாரி முதல்வர் ஆனந்தவேலு, நிர்வாக அதிகாரி கோகுலகண்ணன், மேலாளர் விஸ்வநாத் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர். தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை நடந்தது.

