
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் நகராட்சி வளாகத்தில் குடியரசு தின விழா நடந்தது.
நகரமன்ற சேர்மன் செந்தில்குமார் தலைமை தாங்கி, தேசிய கொடி ஏற்றினார்.
நகராட்சி ஆணையாளர் மல்லிகா, பொறியாளர் சுரேஷ், நகரமன்ற கொறடா ஜேம்ஸ் விஜயராகவன் முன்னிலை வகித்தனர்.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், எழுதுகோல் இனிப்பு வழங்கப்பட்டது.
நகர மன்ற துணை தலைவர் முத்துக்குமரன், கவுன்சிலர்கள் ரமேஷ், அப்பு சந்திரசேகரன், வெங்கடேசன், மணிகண்டன், சுதா, சரவணன், பூங்கொடி, கல்பனா, இந்துமதி அருள், தி.மு.க., நகர துணை செயலாளர் பாலசுப்ரமணியன், இளங்கோவன், தொழில்நுட்ப பிரிவு ஸ்ரீதர், இளைஞரணி அமைப்பாளர் அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

