ADDED : ஏப் 26, 2026 09:12 PM
நடுவீரப்பட்டு: ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் செவிலியர்களை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடுவீரப்பட்டில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதாரநிலையம் இயங்கி வருகிறது. இந்த சுகாதாரநிலையத்தில் சி.என்.பாளையம், பத்திரக்கோட்டை, விலங்கல்பட்டு, வானமாதேவி, பாலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தினமும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
மேலும் 24 மணிநேர பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சை வசதிகள் உள்ளன. பொது மருத்துவம், கண், பல், சித்தா உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த சுகாதார நிலையத்தில் போதிய டாக்டர்கள் உள்ளனர். ஆனால், 3 செவிலியர்கள் பணியில் இருக்க வேண்டிய இடத்தில், ஒரு செவிலியர் மட்டுமே உள்ளார். இதனால் நோயாளிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
அதனால் மாவட்ட நிர்வாகம் நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு கூடுதல் செவிலியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
