/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திட்டக்குடி தாலுகா கிராமங்களை வேப்பூரில் இணைக்க கோரிக்கை
/
திட்டக்குடி தாலுகா கிராமங்களை வேப்பூரில் இணைக்க கோரிக்கை
திட்டக்குடி தாலுகா கிராமங்களை வேப்பூரில் இணைக்க கோரிக்கை
திட்டக்குடி தாலுகா கிராமங்களை வேப்பூரில் இணைக்க கோரிக்கை
ADDED : செப் 15, 2025 02:17 AM
ராமநத்தம்: வேப்பூர் அருகில் உள்ள திட்டக்குடி தாலுகாவிற்குட்பட்ட கிராமங்களை வேப்பூர் தாலுகாவுடன் இணைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திட்டக்குடி மற்றும் விருத்தாசலம் தாலுகாவில் இருந்து பிரித்து, கடந்த 2013ம் ஆண்டு 53 வருவாய் கிராமங்களுடன் வேப்பூர் தாலுகா தனியாக உருவாக்கப்பட்டது. தற்போது, திட்டக்குடி தாலுகாவில் 109 வருவாய் கிராமங்கள் உள்ளன.
அதில், வேப்பூருக்கு அருகில் உள்ள தொண்டங்குறிச்சி, புல்லுார், கல்லுார், ம.புடையூர், ஆவட்டி, பனையாந்துார், பாசார், சிறுகரம்பலுார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் இன்னும் திட்டக்குடி தாலுகாவின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.
திட்டக்குடியில் இருந்து 15-20 கி.மீ., தொலைவிலுள்ள இந்த கிராமங்கள் 5 கி.மீ.,தொலைவிற்குள் உள்ள வேப்பூர் தாலுகாவுடன் இணைத்தால் பொ துமக்கள் அலைக்கழிக்கப்படுவது தவிர்க்கப்படும். மேலும், நேரடி பஸ் வசதி இல்லாததால் மக்கள் சான்றிதழ் உள்ளிட்ட தேவைகளுக்காக தொலைவில் உள்ள திட்டக்குடி க்கு செல்ல முடியாமல் அவதியடைகின்றனர்.
எனவே, வேப்பூருக்கு அருகில் உள்ள திட்டக்குடி தாலுகாவைச் சேர்ந்த கிராமங்களை வேப்பூர் தாலுகாவுடன் இணைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.