ADDED : பிப் 28, 2026 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: திட்டக்குடியில் இருந்து ஆவினங்குடி வழியாக நெய்வாசலுக்கு அரசு டவுன் பஸ் இயக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திட்டக்குடி அடுத்த நெய்வாசலில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இக்கிராமத்திற்கு பஸ் வசதி இல்லாததால், மக்கள் 4 கிலோ மீட்டர் துாரமுள்ள ஆவினங்குடி பஸ் நிறுத்தம் அல்லது 6 கிலோ மீட்டர் துாரமுள்ள கொடிகளம் பஸ் நிறுத்தம் வந்து பஸ் ஏற வேண்டியுள்ளது.
பஸ் வசதிக்கோரி கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் பெண்கள், சிறுவர்கள், முதியோர்கள், பள்ளி, கல்லுா ரி மாணவர்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.
இது குறித்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

