/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடியிருப்போர் சங்க பொதுக்குழு கூட்டம்
/
குடியிருப்போர் சங்க பொதுக்குழு கூட்டம்
ADDED : ஜன 02, 2025 08:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுாரில் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு பொதுக் குழு கூட்டம் நடந்தது.
கூட்டமைப்பு தலைவர் பச்சையப்பன் தலைமை தாங்கினார். சிறப்பு தலைவர் மருதவாணன், ஆலோசகர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். இணைப் பொதுச் செயலாளர் தேவநாதன் வரவேற்றார். பொதுச் செயலாளர் வெங்கடேசன் பேசினார்.
பெண்ணையாற்றின் இருகரைகளிலும் வெள்ளத் தடுப்பு சுவர் கட்ட வேண்டும். கடலுார் மாநகராட்சியுடன் 13 ஊராட்சிகளை இணைக்கும் விவகாரத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உதவி பொதுச் செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

