/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேட்பாளர்களை ஒரே மேடையில் பேச வைக்க தீர்மானம்
/
வேட்பாளர்களை ஒரே மேடையில் பேச வைக்க தீர்மானம்
ADDED : மார் 08, 2026 04:45 AM

கடலுார்: கடலுார் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம், கடலுார் வரதராஜன் நகரில் நடந்தது.
கூட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் பச்சையப்பன் தலைமை தாங்கினார். சிறப்பு தலைவர் மருதவாணன், துணைத் தலைவர்கள் ராஜேந்திரன், கலியமூர்த்தி,ஆறுமுகம், கோமதிநாயகம், சண்முகம், ராஜசேகரன் முன்னிலை வகித்தனர்.
பொருளாளர் வெங்கட்ரமணி வரவேற்றார். பொதுச்செயலாளர் வெங்கடேசன் சங்க செயல்பாடுகள் குறித்துப் பேசினார்.
கூட்டத்தில் கடலுார் சட்டசபை தொகுதியில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் மனு அளிப்பது, போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடையில் பேச வைப்பது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன. துணைத்தலைவர் நடராஜன் நன்றி கூறினார்.

