sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்

/

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 22, 2025 09:39 AM

Google News

ADDED : ஜன 22, 2025 09:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில், தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் மரியதாஸ், கந்தசாமி, வையாபுரி, கோதண்டராமன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் இளங்கோவன் துவக்கவுரையாற்றினார்.

மாநில பொதுச்செயலாளர் அபரஞ்சி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், அரசு தொழிற்பயிற்சி அலுவலர்கள் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் தர்மலிங்கம், மின்வாரிய ஓய்வுபெற்றோர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், 70 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது, இணை செயலாளர்கள் ராஜூ, சவரிமுத்து, சந்திரசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மாநில பொருளாளர் பாலசுப்பிரமணியன் நிறைவுரையாற்றினார்.

மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us