ADDED : ஜூலை 12, 2026 04:20 AM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: கம்மாபுரம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் புரு ேஷாத்தமன் மற்றும் போலீசார் நேற்று பெரியகோட்டுமுளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் உள்ள மணிமுக்தாற்றில் சின்னகோட்டுமுளை கிராமத்தை சேர்ந்த சூர்யபிரகாஷ்; ராஜன்; சிறுவரப்பூர் கதிர் ஆகியோர் பைக்கில் ஆற்றுமணல் கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, பைக்கை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய மூவரையும் தேடி வருகின்றனர்.
