ADDED : ஜன 10, 2025 06:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே நடந்த சாலை விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.
நெல்லிக்குப்பம் அடுத்த ஆண்டிபாளையத்தை சேர்ந்தவர் ராஜீ, 32; வழக்கறிஞருக்கு படித்து வருகிறார். இவர், கடந்த 7ம் தேதி இரவு பைக்கில் கடலூரில் இருந்து வீட்டுக்கு சென்றார்.
நத்தப்பட்டு மேம்பாலம் அருகே சென்றபோது எதிரே பண்ருட்டியை சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவர் ஓட்டி வந்த பைக் ராஜீ மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த ராஜீ கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று இறந்தார். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.