sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பாதை ஆக்கிரமிப்பு : கிராம மக்கள் தர்ணா

/

பாதை ஆக்கிரமிப்பு : கிராம மக்கள் தர்ணா

பாதை ஆக்கிரமிப்பு : கிராம மக்கள் தர்ணா

பாதை ஆக்கிரமிப்பு : கிராம மக்கள் தர்ணா


ADDED : நவ 05, 2025 07:28 AM

Google News

ADDED : நவ 05, 2025 07:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: கீரம்பூர் கிராமத்தில் நடை பாதையை ஆக்கிரமிப்பு செய்வதை கண்டித்து, கிராம மக்கள் ஆர்.டி.ஓ., அலுவல கத்தை முற்றுகையிட்டனர்.

விருத்தாசலம் அடுத்த கீரம்பூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், நேற்று மதியம், 12:00 மணியளவில், ஆர்.டி.ஓ., அலுவலக வாசலில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடவில்லை. தகவலறிந்த ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் அந்தோணிராஜ் சமாதானம் செய்தார். அவரிடம் மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

'கீரம்பூர் கிழக்கு பகுதியில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இங்குள்ள பொது பாதை வழியை மாணவர்கள், கிராம மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், தெரு முகப்பில் உள்ள தனிநபர்கள் பாதையை ஆக்கிரமித்து மாடுகள் கட்டி, இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதனை தட்டிக்கேட்டால் முறையற்ற வகையில் பேசி, மிரட்டல் விடுக்கின்றனர். ஆக்கிரமிப்பை அகற்றி, நாங்கள் பயன்படுத்த பாதையை ஏற்படுத்தி தர வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, வேப்பூர் போலீசாரிடம் தகவல் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக நேர்முக உதவியாளர் தெரிவித்ததையேற்று, அவர்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us