ADDED : ஜன 22, 2026 06:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், போக்குவரத்து போலீசார் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் வினோத்குமார் தலைமை தாங்கினார்.
போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார், சாலை மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தினர்.
இதில், தலைமை காவலர்கள் சரவணன், சிவக்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

