sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி கைது; சிதம்பரம் போலீசார் அதிரடி

/

வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி கைது; சிதம்பரம் போலீசார் அதிரடி

வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி கைது; சிதம்பரம் போலீசார் அதிரடி

வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி கைது; சிதம்பரம் போலீசார் அதிரடி


ADDED : அக் 12, 2024 07:27 AM

Google News

ADDED : அக் 12, 2024 07:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் : சிதம்பரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரத்தைச் சேர்ந்தவர் புகழேந்தி,46: லாரி டிரைவர். இவர் கடந்த 10ம் தேதி சிவபுரி மெயின்ரோட்டில் நடந்து சென்றபோது, அண்ணாமலை நகரை சேர்ந்த பாபு (எ) மர்டர் பாபு,43; வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ஒரு சவரன் தங்கசெயினை பறித்து சென்றார்.

இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து தேடி வந்தனர்.

அதில் கிடைத்த தகவலின்பேரில் அண்ணாமலை நகர் ரயி்ல்வே மேம்பாலம் அருகே பதுங்கியிருந்த பாபுவை கைது செய்து, அவர் வைத்திருந்த கத்தி மற்றும் தங்க செயினை பறிமுதல் செய்தனர்.

போலீசார் பாபுவை பிடிக்க முயன்றபோது, தப்பிக்க முயன்றதால் கீழே விழுந்ததில், இடதுகையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து அவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட பாபு மீது இரட்டை கொலை வழக்கு, கஞ்சா விற்பனை, கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளதும், வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிந்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us