/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடி தஞ்சம்
/
போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடி தஞ்சம்
ADDED : ஆக 24, 2025 06:57 AM
நெல்லிக்குப்பம் :நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.
நெல்லிக்குப்பம் அடுத்த பி.என்.பாளையத்தை சேர்ந்தவர் ஜெகன் மகன் ராகுல்ராஜ்,28; உளுந்துார்பேட்டை மேலப்பாளையத்தை சேர்ந்தவர் முருகன் மகள் சுஜி,22; இருவரும் சென்னையில் தனியார் கல்லுாரியில் பணிபுரியும் போது, பழக்கம் ஏற்பட்டு காதலித்தனர்.
இதனையறிந்த சுஜியின் பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர். இதனால் ராகுல்ராஜ், சுஜி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடலுார் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின், பாதுகாப்பு கேட்டு நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று தஞ்சமடைந்தனர். இருதரப்பினர் 100க்கும் மேற்பட்டோர் கூடியதால் பரபரப்பு நிலவியது. இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பினார்.

