sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரூ. 3.90 லட்சம் திருட்டு; பண்ருட்டியில் துணிகரம்

/

ரூ. 3.90 லட்சம் திருட்டு; பண்ருட்டியில் துணிகரம்

ரூ. 3.90 லட்சம் திருட்டு; பண்ருட்டியில் துணிகரம்

ரூ. 3.90 லட்சம் திருட்டு; பண்ருட்டியில் துணிகரம்


ADDED : ஜூலை 15, 2025 10:47 PM

Google News

ADDED : ஜூலை 15, 2025 10:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி,; பண்ருட்டியில் 2 பூக்கடைகளில் புகுந்து ரூ. 3.90 லட்சம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பண்ருட்டியைச் சேர்ந்தவர் அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் பாலமுருகன்.45; இவர், காந்திரோட்டில் பூக்கடை வைத்துள்ளார். இவர் கடையை நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பூட்டிச் சென்றார். நேற்று காலை 6:00 மணிக்கு கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, கல்லா பெட்டியை உடைத்து மர்ம நபர்கள் 1 லட்சம் ரூபாயை திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பண்ருட்டி சப் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, விசாரணை நடத்தியதில், மேற்கூரை சிமெண்ட் ஷீட்டை உடைத்து உள்ளே வந்து பணத்தை திருடியது தெரிந்தது. 'சிசிடிவி'யில் பதிவான காட்சிகள் அடிப்படையில் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இவரது கடையில் இருந்து 50 மீட்டர் துாரத்தில் உள்ள பண்ருட்டியைச் சேர்ந்த அழகுமுத்து,40; என்பவரின் பூக்கடையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 2.90 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இருவரும் அளித்த புகாரின் பேரில், பண்ருட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us