/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ. 2 லட்சம் மதிப்பு நகை, பணம் திருட்டு
/
ரூ. 2 லட்சம் மதிப்பு நகை, பணம் திருட்டு
ADDED : அக் 22, 2025 09:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வைடிபாக்கத்தை சேர்ந்தவர் சிவா. தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 17ம் தேதி குடும்பத்தினருடன் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.
நேற்று காலை வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் முன்கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த இரண்டரை சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 2 லட்சமாகும். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.