/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கார் கண்ணாடியை உடைத்து ரூ.4 லட்சம் திருட்டு
/
கார் கண்ணாடியை உடைத்து ரூ.4 லட்சம் திருட்டு
ADDED : செப் 21, 2024 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரத்தில் நிறுத்தியிருந்த கார் கண்ணாடியை உடைத்து ரூ.4 லட்சம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
சிதம்பரம் மெய்காவல் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் சுதாகர்,43; இவர் சிதம்பரம் கீழ ரத வீதியில், தனியார் வங்கி முன் தனது காரின் டேஸ் போர்டில் ரூ.4 லட்சம் பணத்தை வைத்துவிட்டு வங்கிக்கு சென்றார்.
வங்கி வேலையை முடித்துவிட்டு வந்தபோது, காரின் இடதுமுன்பக்க கண்ணாடி உடைந்திருந்தது. மேலும், டேஸ் போர்டில் வைத்திருந்த ரூ.4 லட்சம் பணம் திருடு போயிருந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.