ADDED : மார் 22, 2026 09:27 PM

குறிஞ்சிப்பாடி: வடலுாரில் திராட்சை வியாபாரியிடம் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.90 ஆயிரத்தை
நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
கடலுார் மாவட்டம், வடலுார், கருங்குழியில் நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில், 90 ஆயிரம் ரூபாய் இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சேர்ந்த திராட்சை வியாபாரியான டிரைவர் ரோஹித்,35; என்பவரிடம் நடத்திய விசாரணையில், கடலுாரில் திராட்சை விற்பனை செய்ததும், அதற்கான பணத்தை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்ததும் தெரிந்தது. உடன், கண்காணிப்பு குழுவினர் பணத்தை பறிமுதல் செய்து, குறிஞ்சிப்பாடி தாசில்தார் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி தனலட்சுமியிடம் ஒப்படைத்தனர்.
