sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சப்த விநாயகர் கோவிலில் சம்வத்ஸராபிஷேக விழா

/

சப்த விநாயகர் கோவிலில் சம்வத்ஸராபிஷேக விழா

சப்த விநாயகர் கோவிலில் சம்வத்ஸராபிஷேக விழா

சப்த விநாயகர் கோவிலில் சம்வத்ஸராபிஷேக விழா


ADDED : ஜூலை 08, 2025 12:38 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 12:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : நெய்வேலி ஆர்ச் கேட் சப்த விநாயகர் கோவிலில் சம்வத்ஸராபிஷேக விழா நடந்தது.

நெய்வேலி ஆர்ச் கேட் அருகில் உள்ள அண்ணா கிராமத்தில் காஞ்சி சங்கரமடத்தைச் சேர்ந்த சப்த விநாயகர் கோவிலில், வருஷாபிஷேகம் எனப்படும் ஸம்வத்ஸராபிஷேக விழாவையொட்டி கடந்த 5ம் தேதி காலை கணபதி ஹோமம், சுயம்வர கலா பார்வதி ஹோமம், சந்தான கோபால கிருஷ்ணன் ஹோமம், திருமணம் நடைபெறவும், குழந்தை செல்வம் கிடைக்கவும் பிரார்த்தனை செய்யப்பட்டு ஹோமம் நடந்தது.

மாலை முதல் கால யாசாலை பூஜை துவங்கியது. நேற்று முன்தினம் காலை இரண்டாம் கால யாக பூஜைகள், தம்பதி பூஜை, வடுக பூஜை, சுகாசினி பூஜைகள் நடந்தது.

தொடர்ந்து சப்த விநாயகர், மகா பெரியவருக்கு மகா அபிஷேகம் நடந்தது. மாலை ஆன்மிக சொற்பொழிவாளர் மணிகண்டன், 'ஆன்மிகத்தில் ஆனந்தம்' என்ற தலைப்பில் பேசினார்.

விழாவில் கோவிலை நிர்மாணித்த மகாலிங்கம் மகன்கள் ராஜ்குமார், ரமேஷ், சுரேஷ் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சப்த விநாயகர் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர். டிரஸ்ட் செயலாளர் ராஜேஷ், பொருளாளர் சுரேஷ் தலைமையில் அனைத்து நிகழ்ச்சிகளும் நடந்தது.






      Dinamalar
      Follow us