ADDED : நவ 27, 2024 08:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள திட்டக்குடி தாலுகாவின் எல்லைப்பகுதியாக பெரம்பலுார், அரியலுார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் உள்ளன. தாலுகாவில் ஓடும் வெள்ளாற்றிலிருந்து மணல் திருடுவது கட்டுப்படுத்த முடியாததாக உள்ளது.
இதில் பெரம்பலுார், அரியலுார் மாவட்டங்களைச் சேர்ந்த சிலரும், கடலுார் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் மணல் அள்ளுவதை தற்போது வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இதற்காக கடலுார் மாவட்டத்திலுள்ள வருவாய்த்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் சிலரை கைக்குள் வைத்துக்கொண்டு அவர்களுக்கு மாமூல் கொடுத்து வருகின்றனர். இதனால் தங்குதடையின்றி மணல் திருட்டு நடப்பது பொதுமக்களை வேதனையடைய செய்துள்ளது.

