ADDED : ஏப் 05, 2025 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; பைக்கில் ஆற்றுமணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ் பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் பூதாமூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த பைக்கில், மணிமுக்தாற்றில் இருந்து சாக்கு மூட்டைகளில் ஆற்று மணல் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிந்து, காந்திநகரைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் சந்துருராஜ், 29, என்பவரை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.