ADDED : பிப் 04, 2026 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் மினிலாரியில் ஆற்றுமணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் பாரத நேரு தலைமையிலான போலீசார் பூதாமூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சாவடிகுப்பம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து, 30; என்பவர் மினிலாரியில், ஆற்றுமணல் கடத்திவந்தது தெரிந்தது.
உடன், போலீசார் வழக்குப் பதிந்து காளிமுத்துவை கைது செய்தனர். மேலும், தலைமறைவான திரு.வி.க., நகர் பிரகாஷ் என்பவரை தேடி வருகின்றனர்.

