ADDED : ஜூலை 07, 2025 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சாக்குமூட்டையில் மணல் கடத்த பயன்படுத்திய பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். பரவளூர் அம்மன் கோவில் அருகே பைக்கில் சாக்கு மூட்டையில் மணல் கடத்தி வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர் அதே பகுதியை சேர்ந்த செல்வராசு மகன் சதீஷ்குமார், 30, என்பது தெரிந்தது. இவர் மீது வழக்குப் பதிந்து பைக் மற்றும் மணல் மூட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டன.
இதேப் போன்று, சாவடிகுப்பம் மணிமுக்தாற்றில் இருந்து சாக்கு மூட்டைகளில் மணல் கடத்தி வந்த மர்மநபர், போலீசாரை கண்டதும், பைக்கை நிறுத்திவிட்டு தப்பியோடினார். பைக் மற்றும் மணல் மூட்டைகளை போலீசார் பறிமுதல் தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.