UPDATED : ஜூன் 29, 2026 11:11 PM
ADDED : ஜூன் 29, 2026 11:02 PM
அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை: புவனகிரியில் லாரியில் சவுடு மணல் கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
புவனகிரி இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார், புவனகிரியில் வாகன சோதனை செய்தனர். அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், சவுடு மணல் கடத்தி வந்தது தெரிந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து லாரி டிரைவர் சீர்காழி தாலுகா, ஏத்தங்குடி பகுதியைச் சேர்ந்த கணேஷை, 36; கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.
