ADDED : பிப் 11, 2024 03:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மணல் கடத்த பயன்படுத்திய டாடா ஏஸ் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பண்ருட்டி அடுத்த சிறுகிராமம் மலட்டாற்றில் மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலின்பேரில் புதுப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு, டாடா ஏஸ் வாகனத்தில் மணல் அள்ளியது தெரியவந்தது, போலீசை கண்டதும் மணல் கடத்திய விழுப்புரம் மாவட்டம், அரசூர் குச்சிப்பாளையத்தை சேர்ந்த ஆனந்த் என்பவர் தப்பியோடி விட்டார். புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, டாடா ஏஸ் வாகனத்தை பறிமுதல் செய்தனர். ஆனந்தை தேடி வருகின்றனர்.