ADDED : பிப் 25, 2024 04:52 AM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்,: விருத்தாசலம் சப் இன்ஸ் பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் நேற்று விருத்தாசலம் - வேப்பூர் சாலை, கோமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த லாரியை சோதனை செய்ததில், அனுமதியின்றி ஆற்றுமணல் கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், டி.வி.புத்துார் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் மணிவேல், 33; என்பவரை கைது செய்தனர்.
