ADDED : பிப் 03, 2026 03:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் ஹஜ்ரத் சாஹிபு தர்வேஷ் அவுலியா தர்காவில் சந்தனக் கூடு ஊர்வலம் நடந்தது.
நெல்லிக்குப்பம் சுல்தான்பேட்டையில் ஹஜ்ரத் சாஹிபு தர்வேஷ் அவுலியா தர்காவில் சந்தனக்கூடு விழா கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று முன்தினம் சந்தனம் அடங்கிய குடத்துடன் சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று தர்காவை அடைந்தது. அங்கு மஜார் ஷரிப் மீது சந்தனம் பூசப்பட்டது.
நேற்று கொடி இறக்கப்பட்டது. நாகூர் தர்கா ஆதினம் ஹாஜா சம்சுதீன் சாஹிப் உட்பட பலர் பங்கேற்றனர். 100 ஆண்டிற்கு பிறகு சந்தனக் கூடு திருவிழா நடந்தது குறிப் பிடத்தக்கது.

