ADDED : ஜன 30, 2024 05:55 AM
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது.
அப்போது, சிறப்பு அலங்காரத்தில் மூலவரும், உற்சவர் ஊஞ்சல் உற்சவத்திலும் அருள்பாலித்தனர். பூஜைகளை முருகானந்தம் குருக்கள் செய்தார். அதேபோன்று, அருள்தரும் ஐயப்பன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
பெண்ணாடம்
பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், வெற்றி விநாயகர் சுவாமிக்கு நேற்று சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடந்தது. காலை 10:00 மணியளவில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், 10:30 மணியளவில் தீபாராதனை நடந்தது. காலை 10:45 மணியளவில் பிரகாரத்தில் உள்ள வெற்றி விநாயகருக்கு அபிேஷகம்; பகல் 11:00 மணியளவில் அருகம்புல் மாலை சாற்றி, மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.