
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள இரண்டாம் படை வீடான ஆழத்து விநாயகர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அருகம்புல் மாலைகள் சாற்றி தீபாரானை நடந்தது. ராஜஅலங்காரத்தில் விநாயகர் அருள்பாலித்தார்.
மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக்கவசம் சாற்றி மஞ்சள், வெற்றிலை, அருகம்புல், எருக்கன் பூ மாலைகள் சாற்றி தீபாராதனை நடந்தது.
இதேபோல், ஆற்றங்கரை சித்தி விநாயகர், காந்தி நகர் நர்த்தன விநாயகர், தெற்கு தெரு யாகசாலை விநாயகர், அய்யனார்கோவில் தெரு வழித்துணை விநாயகர், ரயில்வே குடியிருப்பு சித்தி விநாயகர், கடலுார் ரோடு விஜய விநாயகர், பெரியார் நகர் வினை தீர்த்த சித்தி விநாயகர், சக்தி விநாயகர் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானோர் விளக்கேற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

