ADDED : செப் 18, 2024 09:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: துாய்மை இந்தியா இயக்கம் சார்பில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜூன் 5ம் தேதி, பிரதமரால், 'ஏக் பெத் மா கே நாம்' பிரசார இயக்கம் துவக்கி வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, கடலுார் திருப்பாதிரிபுலியூர் சுப்ராயசெட்டி தெருவில் இயங்கிவரும் தேசிய மாதிரி ஆய்வு அலுவலம், கடலுார் துணை வட்டார அலுவலகம் சார்பில், திருப்பாதிரிப்புலியூர் அண்ணாமலை நகர் பூங்காவில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
நிகழ்ச்சியில், கடலுார் தேசிய மாதிரி ஆய்வு அலுவலக துணை வட்டார முதுநிலை அதிகாரி சுரேஷ்குமார், புள்ளியியல் துறை அலுவலர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

