/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள்
/
சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள்
ADDED : மார் 30, 2025 08:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசை முன்னிட்டு மூலவர் பெருமாள் ஸ்ரீசீதா லட்சுமண அனுமன் சமேத ஸ்ரீகோதண்டராமர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடு நடந்து, திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பகல் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடை திறப்பு, மாலை 6:00 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது.