sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு பேரணி

/

பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு பேரணி

பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு பேரணி

பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு பேரணி


ADDED : அக் 23, 2024 04:27 AM

Google News

ADDED : அக் 23, 2024 04:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுாரில், காவல்துறை சார்பில் பாலியல் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

திருப்பாதிரிபுலியூர் ஜவான்ஸ்பவன் அருகே துவங்கிய பேரணியை மாவட்ட கூடுதல் எஸ்.பி., கோடீஸ்வரன், டி.எஸ்.பி.,ரூபன்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அரசுப்பள்ளி மாணவர்கள் ஊர்வலமாக வந்தனர். விழிப்புணர்வு பேரணி ஜவான்ஸ்பவனில் துவங்கி கடலுார் டவுன் ஹாலில் முடிவடைந்தது.

நிகழ்ச்சியில் மாவட்ட சமூகநல அலுவலர் சித்ரா, மாவட்ட குழந்தை நல பாதுகாப்பு அலுவலர் சுந்தர், மாவட்ட குழந்தை நலக்குழு தலைவர் லட்சுமி வீரராகவலு மற்றும் போலீசார், பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us