
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மயிலை குருஜி நர்சரி மற்றும் பிரைமரிப்பள்ளியில் 46 ம் ஆண்டு பள்ளிஆண்டு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் மோகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முத்துகிருஷ்ணன் கலந்து கொண்டு போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
விழாவில், கடலுார் கல்கி நர்சரி மற்றும் பிரைமரிப் பள்ளி தாளாளர் கதிர்வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

