ADDED : ஆக 02, 2025 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரி ஒன்றியம், வடதலைக்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழுக்கூட்டம் நடந்தது.
தலைமை ஆசிரியர் துரை மணிராஜன் தலைமை தாங்கினார். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, அரசு சார்பில் வழங்கப்படும் திட்டங்களை எடுத்துக்கூறி பிள்ளை களை அரசுப் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், பெற்றோர், மேலாண்மை குழு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர்கள், முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.
உதவி ஆசிரியர் வசந்தா நன்றி கூறினார்.

