ADDED : ஜன 19, 2026 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பள்ளி மாணவர் தற்கொலை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த திருவதிகை பாரதி நகரை சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் கவினேஷ்,15; இவர் தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் தந்தை செந்திலுடன் நேற்றுமுன்தினம் இரவு துாங்கிகொண்டிருந்தார். அதிகாலை 5:00 மணிக்கு செந்தில் எழுந்து பார்த்த போது வீ ட்டின் மின்விசிறியில் கவினேஷ் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டுபோய் சேர்த்தனர். அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் கவினேஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பண்ருட்டி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர் .

