sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஊஞ்சல் கயிற்றில் சிக்கி பள்ளி மாணவி பலி

/

ஊஞ்சல் கயிற்றில் சிக்கி பள்ளி மாணவி பலி

ஊஞ்சல் கயிற்றில் சிக்கி பள்ளி மாணவி பலி

ஊஞ்சல் கயிற்றில் சிக்கி பள்ளி மாணவி பலி


ADDED : ஜன 06, 2025 06:38 AM

Google News

ADDED : ஜன 06, 2025 06:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே ஊஞ்சல் ஆடிய மாணவி, கயிற்றில் சிக்கி இறந்தார்.

பெண்ணாடம் அடுத்த கோனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துலிங்கம், 39; வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அனிதா,37; இவர்களுக்கு சந்துரு,15; என்ற மகனும், ரிதுவர்ஷினி,13; மகளும் உள்ளனர். இருவரும், பெண்ணாடத்தில் உள்ள பள்ளியில் முறையே 10 மற்றும் 8ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

நேற்று காலை அனிதா வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு வேலைக்கு சென்று விட்டார். விடுமுறையில் வீட்டில் இருந்த ரிதுவர்ஷினி, வீட்டிற்குள் நைலான் கயிற்றில் ஊஞ்சல் ஆடியபோது, எதிர்பாராத விதமாக ஊஞ்சல் கயிறு மாணவியின் கழுத்தில் இறுகியது.

ரிதுவர்ஷினி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று, அவரை மீட்டு பெண்ணாடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார்.

தகவலறிந்த பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் மற்றும் போலீசார், ரிதுவர்ஷினி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us