/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளி மாணவி கர்ப்பம்: மாணவர் கைது
/
பள்ளி மாணவி கர்ப்பம்: மாணவர் கைது
ADDED : அக் 16, 2024 08:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : சிதம்பரம் அருகே மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி மாணவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுவன். அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர், அதே பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் 14 வயதுடைய சிறுமியுடன் நெருங்கி பழகினார்.
இதில், சிறுமி கர்ப்பமானார். இது குறித்த புகாரின்பேரில், சிதம்பரம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அமுதா, வழக்கு பதிந்து, மாணவரை, போக்சோ சட்டத்தில் கைது செய்தார். சிறுவன் கடலூரில் உள்ள சீர்திருத்த பள்ளியில் ஒப்படைக்கப்பட்டார்.