ADDED : நவ 23, 2024 05:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுாரில் கடல் சீற்றமாக காணப்பட்டதால், மீனவர்கள் தங்கள் படகுகளை கரையோரத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும், அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தெற்கு பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடலுார் தாழங்குடா மற்றும் தேவனாம்பட்டினம், முதுநகர் பகுதிகளில் கடலில் நேற்று 30 முதல் 40 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. இதன் காரணமாக, கடல் சீற்றமாக காணப்பட்டதால், மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்கள் படகுகளை கரையோரத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர்.