ADDED : பிப் 18, 2024 12:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லுாரியில் தாவரவியல் துறை சார்பில் பல்லுயிர் பன்மயம் பாதுகாத்தல் குறித்த கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் ராமகிருஷ்ணன் சாந்தி தலைமை தாங்கினார். தாவரவியல் துறைத் தலைவர் நிர்மல் குமார் வரவேற்றார். புதுச்சேரி உயர்கல்வித்துறை உறுப்பினர் ராமானுஜம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில், தாவரவியல் மன்றம் மற்றும் கிரீன் கிளப் துவங்கப்பட்டது.
ரவிக்குமார், தேவநாதன், ஆனந்தராஜ், அன்பழகன் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.