/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆதிபராசக்தி இயக்கம் சார்பில் சக்தி மாலை அணிவிக்கும் விழா
/
ஆதிபராசக்தி இயக்கம் சார்பில் சக்தி மாலை அணிவிக்கும் விழா
ஆதிபராசக்தி இயக்கம் சார்பில் சக்தி மாலை அணிவிக்கும் விழா
ஆதிபராசக்தி இயக்கம் சார்பில் சக்தி மாலை அணிவிக்கும் விழா
ADDED : டிச 12, 2024 08:09 AM

பரங்கிப்பேட்டை; கடலுார் மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில், இயற்கை சீற்றங்கள் தனியவும், உலக அமைதி வேண்டியும் பரங்கிப்பேட்டை அடுத்த சி.புதுப்பேட்டை கிராமத்தில், ஆதிபராசக்தி பக்தர்களுக்கு இருமுடி சக்தி மாலை அணிவிக்கும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
மாவட்ட தலைவர் கிருபானந்தம் தலைமை தாங்கி, கலச விளக்கு வேள்வி பூஜையை துவக்கி வைத்தார். மாவட்ட பொருளாளர் கணபதி, துணைத் தலைவர்கள் கோவிந்தராஜ், சீத்தாலட்சுமி, ஜோதி ஜானகி, ராதாகிருஷ்ணன், கணேசமூர்த்தி முன்னிலை வகித்தனர். மண்டல தணிக்கை இணை செயலாளர் ஜவகர் வரவேற்றார். செவ்வாடை பக்தர்களுக்கு, இருமுடி சக்தி மாலை அணிவித்து, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர் டாக்டர் செந்தில்குமார் வழங்கினார்.
விழாவில் மண்டல செயலாளர்கள் கண்ணன், சக்தி முத்துகுமரன், அருளரசன், சந்திரசேகர், பிரசாரக்குழு ஏழுமலை, சுப்ரமணியன், குணசேகரன், ராமசாமி, ஆறுமுகம், கிராம தலைவர் பெர்னாட்ஷா, துணைத் தலைவர் ராஜ், பொருளாளர் ராஜசேகர், ஒன்றிய கவுன்சிலர் ரவி, முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர், முன்னாள் கூடுதல் செயலர் பார்த்தசாரதி, இளைஞரணி இணை செயலாளர் சுந்தரராஜன், மன்ற நிர்வாகிகள் விஜயகுமார், பவுணம்பாள், மேரி, செல்லபாப்பா, சாந்தி ராமலிங்கம் மற்றும் கிராம பொதுமக்கள், செவ்வாடை பக்தர்கள் பங்கேற்றனர்.
மண்டல தணிக்கை இணை செயலாளர் சஞ்சிவிராயர் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை, கடலுார் மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

